×

9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. எல்நினோ காரணமாக பசிபிக் பெருங்கடல் பரப்பில் நிலவும் வெப்பம் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியிலும் நிலவுகிறது. இதனால் தரை மற்றும் கடல்மேற் பரப்புகளில் வெப்பக் காற்று வீசுகிறது. மேலும், வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டலத்தில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று நீலகிரி மாவட்டத்தில் 210 மிமீ மழை பெய்துள்ளது.

வெப்ப சலனம் நீடிப்பதை அடுத்து, வளி மண்டல மேல் அடுக்கில் நிலவும் காற்று சுழற்சியால், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.


Tags : districts , In 9 districts, heavy rain
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...