சென்னை: இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது தான் கட்டுக்குள் வந்துள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.