×

தாண்டிக்குடி அடிவாரத்தில் காட்டு முயல் வேட்டை இருவருக்கு அபராதம்

பட்டிவீரன்பட்டி: தாண்டிக்குடி மலையடிவார பகுதியில் காட்டு முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்  வத்தலக்குண்டு வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர் அய்யனார்செல்வம், வனக்காப்பாளர் பீட்டர்ராஜா உள்ளிட்டோர் ரோந்து சென்றனர்.

அப்போது  தாண்டிக்குடி மட்டமலை பகுதியில் சித்தரேவை சேர்ந்த அழகர் (38), அய்யம்பாளையத்தை சேர்ந்த ராமு (36) ஆகியோர் காட்டுமுயல்களை  வேட்டையாடுவதற்காக கன்னி வலை, முயல் கம்பி அமைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து வனத்துறையினர் இருவரையும் பிடித்து,  அவர்களிடமிருந்த வேட்டை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி இருவருக்கும் அபராதம் விதித்து,  எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



Tags : rabbit hunting ,foothills , Two ,fined ,rabbit ,hunting ,Thandikudi, foothills
× RELATED முயல் வேட்டை வழக்கில் மேலும் 2 பேர் கைது