×

டவுன்- பேட்டை சாலையில் முறிந்த மரக்கிளையால் ஆபத்து

நெல்லை: டவுன்- பேட்டை சாலையில் முறிந்த மரக்கிளையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநலச்சங்க தலைவர் முகம்மது அயூப் கலெக்டரிடம் அளித்த மனு விவரம்: கடந்த சில மாதங்களுக்கு  முன்பு பேட்டை டவுன் சாலையில் குளத்தங்கரை தர்கா சமீபமாக பெரிய ராட்ச மரம் முறிந்து விழுந்தது. ஒரு ஆட்டோ அதில் சிக்கி கொண்டதோடு,  போக்குவரத்து தடையும் ஏற்பட்டது. ஆட்டோவில் சென்றவர்கள் பலத்த காயங்களோடு உயிர் தப்பினர்.

சாலையில் கிடந்த மரக்கிளையை மட்டும் அதிகாரிகள் வந்து அகற்றிச் சென்றனர். அம்மரத்தில் முறிந்து தொங்கி கொண்டிருந்த மரக்கிளைகள்  இன்னமும் அப்படியே உள்ளது. தற்போது அக்கிளைகள் உளுத்துபோய் சாலையில் விழும் நிலையில் காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சாலையில்  பயணிக்கின்றனர். எனவே அம்மரக்கிளையை வெட்டி அகற்றுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : tree branch ,road ,Town , Town- hood, road,branch
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...