சென்னை: நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூரில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.