×

இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேருக்கு கொரோனா

குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 810 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 9 பேர், இறந்துள்ளனர். இந்நிலையில், குன்றத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்தபோது, நேற்று அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை, அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் ஸ்டேட் வங்கி உள்ளது அங்கு பணியாற்றும் காசாளர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்ததில், நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து உடனடியாக அந்த வங்கி சேவைகள் நிறுத்தப்பட்டன. வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வங்கி மூடப்பட்டது. மேலும், அவருடன் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் கொரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனை முடிவு வந்த பிறகே வேறு யாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Corona ,inspector , Inspector, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...