×

விவசாயிகள் போராட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பாலாற்றில் புதியதாக கட்டப்படும் தடுப்பணையை இடம் மாற்றி அமைப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். உத்திரமேரூர் அருகே பினாயூர் மற்றும் உள்ளாவூர் இடையே பாலாற்றின் குறுக்கே தமிழக முதலமைச்சர் கடந்த மாதம் காணொளி காட்சி மூலம், தடுப்பணை கட்ட பூமி பூஜையை துவக்கி வைத்தார். இதற்காக உள்ளாவூர் பாலாற்றங்கரையில் பூமி பூஜை போடப்பட்டது.அந்த இடத்தில் தடுப்பணை கட்டினால் பினாயூர், அரும்புலியூர், சீத்தாவரம், சாலவாக்கம் உள்ளாவூர், பாலூர் மற்றும் சுற்றியுள்ள நீர்நிலைகள் நிரம்பி சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, மக்களின் குடிநீர் ஆதாரம் உயர்வடையும். இந்நிலையில் பூமி பூஜை போடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டாமல், அங்கிருந்து சுமார் 2 கிமீ முன்னதாகவே தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இதனால் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வழியின்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடும். இதனை கண்டித்து, பூமி பூஜை போடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி பினாயூர் பாலாற்றங்கரை அருகே விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : Farmers struggle
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...