×

கல்பாக்கத்தில் அணுமின் நிலைய ஆராய்ச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கத்தில் அணுமின் நிலைய ஆராய்ச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், பேரளத்தை சேர்ந்தவர் ஜீனா (26). திருமணமாகதவர். கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மாணவியாக பயிற்சி பெற்று வந்தார். அங்குள்ள மாணவிகளுக்கான குடியிருப்பில் தங்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜீனா, அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், சக மாணவிகள் அங்கு சென்றுபார்த்தபோது, ஜீனா மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், ஜீனா எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் கிடைத்தது. அதில்,  ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை’ என எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. அணுமின் நிலைய ஆராய்ச்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : station research student ,Kalpakkam ,suicide , Kalpakkam, nuclear power plant research student, hanged and committed suicide
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...