×

பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். ஆட்சியாளர்கள் ஊழலில் மூழ்கி கிடப்பதால், இது அதிகாரிகள் மட்டுமே தன்னிச்சையாக செய்த மோசடியாக கருத முடியாது. மோசடிக்கு ஊக்கம் கொடுத்த சக்தி எது, இதில் அதிகார மையத்தின் தொடர்புகள் என்ன என்பது போன்ற பல முனைகளிலும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மாநிலம் முழுவதும் பயனடைந்துள்ள விவசாயிகளின் ‘உண்மைத் தன்மை குறித்து’ விரிவாக விசாரிக்க வேண்டும். மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திட்ட நிதி கிடைக்கச் செய்ய வேண்டும். அதிகாரிகள் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை அவர்களிடமே வசூலிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kisan ,investigation ,Mutharajan , Prime Minister Kisan project fraud, thorough investigation, Mutharasan
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...