×

அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டியதால் டிவி நடிகை தற்கொலை: ‘டிக்-டாக்’ காதலனுக்கு போலீசார் வலை

திருமலை: டிக்-டாக் காதலன் அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டியதால் டிவி சீரியல் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் எஸ்.ஆர். நகரில் வசித்து வருபவர் ஸ்ராவணி. தெலுங்கு டிவி  சீரியல்  நடிகை. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ராவணியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.ஆர்.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ெதரிய வந்ததாக போலீசார் கூறியதாவது: ஸ்ராவணி கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவை சேர்ந்த தேவராஜ் என்ற இளைஞருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் மூலம் பழகிவந்தார்.

இருவரும் வெளியிடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். அப்போது தேவராஜ், ஸ்ராவணியை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனை சில நாட்கள் கழித்து ஸ்ராவணியிடம் காண்பித்து, தேவராஜ் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். வேறுவழியின்றி ஸ்ராவணி ரூ1 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அவர், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதுகுறித்து ஸ்ராவணி கடந்த ஜூன் மாதம் எஸ்.ஆர்.நகர போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் அவர் தற்போது தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவான தேவராஜை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags : TV actress ,suicide , Private video, TV actress, suicide
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை