×

கொரோனாவுக்கு மதுரையில் 2 எஸ்ஐ பலி

மதுரை: கொரோனா தொற்றால் மதுரையில் 2 எஸ்ஐ பலியாகியுள்ளனர். மதுரை, சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் சந்தானபாண்டி (56). கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் அதிகரித்து உயிரிழந்தார். சந்தானபாண்டி இதற்கு முன்னர் மதுரை சிபிசிஐடி பிரிவில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த 7ம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு எஸ்ஐ மலர்சாமி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,Madurai , Corona, Madurai, 2 SI, killed
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...