சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது என்று AICTE தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார். மேலும், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எழுதிய பதில் கடிதத்தில் அரியர் தேர்வு ரத்து தவறான முடிவு என கூறியுள்ளதாக தெரிவித்தார். ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையில் AICTE தனது முடிவை தெரிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.