சென்னை: என்னை வளர்த்து ஆளாக்கியவர் கலைஞர் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். என் குடும்பம் என்றும் திமுகவுக்கு நன்றி உள்ளதாக இருக்கும். திமுகவை நினைக்கும் போது எனக்கு இமயமே ஒரு தூசாகத்தான் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.