×

மின்சாரம் தாக்கி யானை பலி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே வயலில் மின்சாரம் தாக்கி நேற்று யானை பலியானது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டை அடுத்த வேனோலியில் நேற்று வயலில் யானை புகுந்து துவம்சம் செய்ததால் வரப்பிலிருந்த மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்தது. இதில் மின்கம்பிகள் பட்டதில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே பலியானது.

தவகலறிந்து வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் இறந்தது அருகில் உள்ள வனத்திலிருந்து வெளியேறிய 35 வயது யானை என்பதும் தெரிய வந்தது. கஞ்சிக்கோடு வாளையார் இடையிலான ரயில் தண்டவாளங்களை கடக்க முயற்சித்தபோது கடந்த 19 ஆண்டுகளில் 27க்கும் மேலான காட்டுயானைகள் ரயிலில் அடிபட்டு பலியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Electricity, elephant
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...