×

கிணற்றில் மூழ்கி 2 பேர் பலி

ஆவடி: கொரட்டூர் சீனிவாசா நகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜானகிராமன் (60). காவலாளி.  குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்று முன்தினம் மாலை குடிபோதையில்  கிணற்றின் மீது உட்கார்ந்திருந்தார். அப்போது, கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முதியவரை சடலமாக மீட்டனர்.

இதேபோல், சண்முகபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியன் (71). இவர், தனது மகன் விஜயகுமாருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சத்தியன் வீட்டு பின்புறம் உள்ள தரை கிணற்றில் தண்ணீர் எடுத்து கொண்டு இருந்தார். அப்போது, அவர் திடீரென கிணற்றில் தவறி விழுந்து  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Tags : 2 drowned in well
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...