×

போதை பொருட்கள் கடத்தியவர் சிக்கினார்

பொன்னேரி: பழவேற்காட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைபொருட்கள் விற்பதாக மாவட்ட எஸ்பி அரவிந்தனுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின்பேரில், திருப்பாலைவனம் போலீசார் நேற்று  ஆண்டார்மடம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்தனர்.

அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் 126 கிலோ இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹1 லட்சம். இதுதொடர்பாக பழவேற்காடு கோணிக்கடை தெருவை சேர்ந்த பிரபு (45) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



Tags : drug smuggler , Drugs, the kidnapper was caught
× RELATED பணக்கார இளைஞர்களை குறிவைத்து ‘போதை...