×

கடையம் அருகே நண்பர் இறந்த சோகத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

கடையம்: கடையம் அருகே நண்பர் உயிரிழந்த சோகத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.கடையம் அருகேயுள்ள நெல்லையப்பபுரம், அருந்ததியர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்தி (31). இவரும், அரசலூரைச் சேர்ந்த நயினார் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். வெளியூரில் தங்கி பெயிண்டிங் வேலைபார்த்து வந்தனர். இதனிடையே கார்த்திக்கு திருமணம் நிச்சய ஏற்பாடு நடந்தது. இதனால் நண்பரை பிரியவேண்டி வரும் என்று எண்ணிய நயினார் கையை பிளேடால் கிழித்து கொண்டார். இதையடுத்து பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தெரியவந்ததும் விஷம் குடித்த கார்த்திக்கை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் உயிர் பிழைத்த கார்த்திக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருப்பினும் தீராத சோகத்தில் இருந்துவந்த கார்த்திக் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்துவந்த கடையம் போலீசார், கார்த்தி உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Pudumappillai ,death ,suicide ,Kadayam , Pudumappillai ,commits ,suicide, Kadayam
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை