சென்னை: தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் அலுவலக ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.