×

இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் சதி : எல்லையோரங்களில் 400 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்!!

டெல்லி : இந்தியாவிற்குள் 400 தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு உள்ளதாக உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. சீனா மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையே லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை பயன்படுத்தி அண்டை நாடான பாகிஸ்தான் தனது நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கோட்டுப் பகுதி வழியே 400 பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயற்சித்துள்ளது.

இதற்ககாக இந்தியாவின் எல்லையோர தீவிரவாத முகாம்களில் பெருமளவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இவர்களை ஊடுருவ செய்யும் வேலையில் பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு பிரிவு ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு ஏதுவாக  போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.இதன்காரணமாக எல்லைப்பகுதியில் பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்திய ராணுவம் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில், தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : militants ,India ,Intelligence ,Pakistan ,border , India, Pakistan, conspiracy, extremists, intelligence
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி