×

இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு தொற்று

ஆவடி: ஆவடி காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் காளிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் கடந்த 5 மாதமாக ஊரடங்கில்  தீவிரமாக பணியாற்றி வந்தனர். இதனால், இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இருவருக்கும் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் காளிராஜ் ராயபுரத்தில் உள்ள தனது வீட்டிலும், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆவடி அருகே வெள்ளானூரில் உள்ள உள்ள அவரது வீட்டிலும் தனிமைபடுத்திக் கொண்டனர்.

மேலும், அவர்கள் வீடுகளில் தங்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, ஆவடி மாநகராட்சி நிர்வாகம், ஆவடி காவல் நிலைய பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த காவலர்களும் கொரோனா தொற்று தொடர்பாக பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

Tags : Inspector ,SI , Inspector, SI, Infection
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு