×

ஆசிரியர்கள் 375 பேருக்கு நல்லாசிரியர் விருது

சென்னை: தலைமை செயலகத்தில் 375 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களில் 375 ஆசிரியர்கள் நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சென்னை மாவட்டத்தில் தேர்வான 15 ஆசிரியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. மேலும், 2020ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை ரா.சி.சரஸ்வதி மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதிலீப் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து விருதிற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Tags : Authors , Teachers, for 375, Best Author Award
× RELATED உலகளாவிய நாவல்களில் ஆர்.கே.நாராயண்,...