×

இனி பேட்டி கொடுக்க மாட்டேன்: அமைச்சர் செல்லூர் ராஜூ ‘பகீர்’

மதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின் நிருபர்களை சந்திக்க வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அனைவரிடமும் ஓர் அறிக்கையை கொடுத்துவிட்டு, ‘‘தேவையான தகவல் இதில் உள்ளது. இதனை எனது பேட்டியாக போட்டுக்கொள்ளுங்கள்’’ என கூறிவிட்டு புறப்பட்டார். நிருபர்கள், ‘பேட்டி கொடுங்கள்’ என மீண்டும் கேட்டபோது, ‘‘நான் கொரோனாவுடன் மக்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என பேட்டி கொடுத்தேன். ஆனால் நீங்கள், முகக்கவசம் அணிய வேண்டாம் என அமைச்சர் கூறினார் என செய்தி வெளியிட்டீர்கள். அன்றைக்கு முகக்கவசம் அணிந்துதான் ஆய்வு செய்தேன். பேட்டியின்போதுதான், முகக்கவசத்தை எடுத்துவிட்டு பேசினேன். இது தவறா? இனிமேல் பேட்டி கொடுக்க மாட்டேன்’’ என கோபமாக கூறிவிட்டு சென்றார்.

Tags : Minister ,interview , Interview, will not give, Minister Cellur Raju ‘Pakir’
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...