×

கருங்குழி பேரூராட்சியில் 1 லிட்டர் சானிடைசர் ரூ2க்கு விற்பனை

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சி சார்பில், மிக குறைந்த விலையில் சானிடைசர் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகாரித்துள்ளது. இதனால், கிருமிகள் மூலம் நோய் தொற்று பரவுவதை தடுக்கவும்,  பாதுகாப்பாக இருக்கவும், அலுவலகங்கள், வீடுகளில் கிருமிநாசினிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதிக விலை கொடுத்து பொதுமக்கள் சானிடைசர் வாங்குவதை தவிர்க்கும் நோக்கில், கருங்குழி பேரூராட்சி சார்பில், மிக குறைந்த விலையில் சானிடைசர் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சானிடைசரை கை சுத்தம் செய்தல், காய்கனிகளை கழுவுதல், வீடுகளை துடைத்தல், கதவு, மேஜை ஆகியவற்றை சுத்தம் செய்தல், தண்ணீரில் சானிடைசரை கலந்து, துவைக்கும் துணிகளை, அலசி காய வைத்தல் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் சானிடைசர் ரூ2க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் காலை 6 மணிமுதல் 10 மணி வரை பேரூராட்சி அலுவலகத்தில், காலி பாட்டில்களை கொண்டு வந்து வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் கூறுகையில், கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில், சானிடைசர் தயாரிக்கும் இயந்திரம் பொறுத்தப்பட்டு, மக்கள் சேவை ஒன்றே குறிக்கோளாக வைத்து தயாரிக்கப்படுகிறது. கருங்குழி பேரூராட்சி மக்கள், நோய் தடுப்பு நடவடிக்கைளுக்காக இதனை பயன்படுத்தலாம் என்றார்.

Tags : Rs ,Sanitizer ,Ebony Municipality , Ebony Municipality, Sanitizer, Sale
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...