சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் 14ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோருக்கு சபாநாயகர் தனபால் கடிதம் அனுப்பி உள்ளார்.பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அது எந்த தேதியில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.