சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில்(இன்று) கோவை, நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையஇயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.