×

சேலம் சிறுவர்களுக்கு சூடுவைத்து சித்ரவதை: யோகா மாஸ்டரிடம் விசாரணை

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜெகநாதன் (44). யோகா மாஸ்டர். இன்று காலை அவரது வீட்டில் இருந்து தப்பிய 2 சிறுவர்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் ஓடி வந்தனர். அங்கிருந்த பொதுமக்களிடம் தங்களை காப்பாற்றும்படி அழுதுகொண்டே கூறினர். சிறுவர்கள் இருவருக்கும் பொதுமக்கள் உணவு வாங்கிக் கொடுத்து விசாரித்தனர்.  இந்த விசாரணையில் தாங்கள் இருவரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ் மகன்கள் காட்டுதுரை (10), துரைப்பாண்டி எனவும், எங்களை படிக்க வைப்பதாக கூறி ஜெகநாதன் இங்கு அழைத்து வந்ததாகவும், ஆனால் தங்களை கட்டிட வேலை செய்யச் சொல்லி ஜெகநாதன் சித்ரவதை செய்ததாகவும் கூறினர்.

காட்டுதுரையான எனது தொடையில் ஜெகநாதன் சூடுவைத்து காயம் ஏற்படுத்தியதாலும், துரைப்பாண்டியை இரும்பு கம்பியால் அடித்து கொடுமைப்படுத்தியதாலும் நாங்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி வந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 சிறுவர்களை மீட்டதுடன், ஜெகநாதன் வீட்டிற்கு சென்று அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.


Tags : boys ,Salem , Salem Boys, Yoga Master
× RELATED தமிழ், மலையாளத்தில் சாதித்த நிலையில்...