சென்னை: கொரோனா பாதித்த ஆசிரியர், அரசு ஊழியர் சிகிச்சை கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். விதிப்படி சிகிச்சை கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க முதல்வர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கட்டணத்தை தர மறுக்கும் நிறுவனங்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் என்று அரசு எச்சரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.