×

ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி: டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

புதுடெல்லி: ஒடிசா கலாம் தீவில் நடைபெற்ற ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து, டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஸ்க்ராம்ஜெட் உந்துவிசை முறையைப் பயன்படுத்தி ஹைப்பர்சோனிக் டெக்னாலஜி டெமோன்ட்ரேட்டர் வாகனத்தை டிஆர்டிஓ இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், அனைத்து முக்கியமான தொழில்நுட்பங்களும் இப்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேற நிறுவப்பட்டுள்ளன.

சுயசார்பு பாரதத்தின் பிரதமரின் பார்வையை உணர்ந்து கொள்வதற்கான இந்த மைல்கல் சாதனைக்கு டிஆர்டிஓவுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகளுடன் பேசினேன், இந்த பெரிய சாதனைக்கு அவர்களை வாழ்த்தினேன். இந்தியா அவர்களால் பெருமை கொள்கிறது, என பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். HSTDV என்பது 20 நொடி நேரத்தில் 32.5 கிலோ மீட்டர் உயரத்தை ஹைப்பர்சோனிக் வேகத்தில் எட்டக்கூடிய ஆளில்லா விமானம் ஆகும். இதை வெற்றிகரமாக சோதித்து பார்த்ததன் மூலம் உலகில் இந்த வசதி உள்ள சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ராணுவ பயன்பாடு மட்டுமின்றி, குறைந்த செலவில் செயற்கை கோள்களை செலுத்தவும் இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rajnath Singh ,DRDO ,scientists , Hypersonic, DRDO, Scientists, Minister Rajnath Singh
× RELATED தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான்: ராஜ்நாத் சிங்