×

நிலச்சரிவில் இறந்த மாணவர்களுக்கு அஞ்சலி

கூடலூர்: மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி தேயிலை எஸ்டேட்டில் ஆக.6ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 குடும்பத்தைச் சேர்ந்த 70 பேர் மாயமாகினர். இதில், 66 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 4 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இறந்தவர்களில் 19 பேர் பள்ளி மாணவர்கள். இவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படித்து வந்தனர். நேற்றுடன் பெட்டிமலை விபத்து நடந்து ஒருமாத காலமாகிறது. இந்நிலையில், நேற்று மூணாறு தனியார் பள்ளி ஆசிரியைகள் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்களின் கல்லறையில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

ஆசிரியையைகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஆசிரியர் தினத்தன்று எங்களுக்கு பூச்செண்டு கொடுத்த இந்த குழந்தைகளுக்கு இந்த ஆண்டு, அவர்களின் கல்லறையில் கண்ணீரோடு மலர் அஞ்சலி செலுத்துகிறோம்’ என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Tags : Tribute ,landslide , Dead , landslide, Tribute ,students
× RELATED புதுச்சேரி சிறுமியின் உடல்...