×

3 மணி நேரத்தில் மீன் உலர்த்தும் இயந்திரம்: என்ஐடி மாணவர்கள் இலவசமாக வழங்கினர்

காரைக்கால்: மூன்று நாளில் உலர்த்தும் மீனை, 3 மணி நேரத்தில் உலர்த்தும் இயந்திரத்தை, காரைக்கால் கோட்டுச்சேரி மேடு  மீனவ கிராம மக்களுக்கு என்ஐடி மாணவர்கள் இலவசமாக வழங்கினர்.காரைக்கால் என்ஐடி நிறுவனத்தில், கடந்த மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மத்திய அரசின் பாரத் அபியான்  திட்டத்தின் கீழ், சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் மீன் உலர்த்தி இயந்திரத்தை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்து  வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, காரைக்கால் கோட்டுச்சேரிமேடு மீனவ கிராம மக்களுக்கு என்ஐடி நிறுவனம், இந்த  இயந்திரத்தை இலவசமாக வழங்கி, அதன் பயன்பாட்டை செயல்முறை விளக்கத்தோடு விளக்கியது. குறிப்பாக, 3 நாட்கள்  உலர்த்தப்பட வேண்டிய மீன்கள், 3 மணி நேரத்தில் உலர்த்தி கருவாடாக்கும் நிலையை மீனவர்கள் நேரடியாக கண்டு, என்.ஐ.டி  மாணவர்களை பாரட்டினர். மேலும், இந்த இயந்திரத்தை உருவாக்கிய என்.ஐ.டி மாணவர்களை அதன் இயக்குனர்  சங்கரநாராயண சாமி பாராட்டினார்.

Tags : NIT , Fish, drying, machine , NIT ,students
× RELATED ஜேஇஇ முதன்மை தேர்வில் நெல்லை மாணவன் சாதனை