×

பாசன வாய்க்காலில் சேதம் மதகு தடுப்பு பலகையை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி: இளையாளூர் கிராமத்தில் பாசனவாய்க்கால் மதகில் உள்ள தடுப்பு பலகையை சீரமைக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்பனார்கோவில் ஒன்றியம் இளையாளூர் கிராமத்தில் பரமகுடி அருகே ஏரி வாய்க்காலில் அர்ச்சனை வாய்க்கால் பிரியும்  இடத்தில் அமைந்துள்ள மதகில் உள்ள தடுப்பு பலகையில் இரும்பு தகடு உடைந்து கிடப்பதால் வாய்க்கால் வழியாக விளை  நிலங்களுக்கு பாசன நீர் செல்லமுடியாமல் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் புகுந்து விடுகிறது.

மழை  காலங்களில் மழை நீர் வாய்க்காலில் வரும்போது தடுப்பு பலகை சீர்கெட்டு கிடப்பதால் வாய்க்காலில் ஒடும் தண்ணீர் சாலையில்  புகுந்து வெள்ளமாக காட்சியளிக்கிறது. எனவே மதகு தடுப்பு பலகை சீரமைத்து பாசனத்திற்கு முறையாக தண்ணீர் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Irrigation Canal Alcohol Barrier Rehabilitation: Farmers Demand ,irrigation canal Alcohol barrier board , Damage ,irrigation , Alcohol, aligned Farmers emand
× RELATED தேர்தல் விதிமுறை தளர்வு வணிகத்தை...