×

உடுமலை சங்கர் கொலை மேல்முறையீட்டு மனு : வழக்கு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று என உச்சநீதிமன்றம் கருத்து!!!

டெல்லி: உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் கவுசல்யா தந்தை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது.
அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டனர். மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சங்கரின் குடும்பத்தினர், தமிழக அரசு, கவுசல்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, வழக்கு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி சின்னசாமிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மேல்முறையீட்டு மனுக்களுக்கு 10 எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

Tags : Udumalai Shankar ,Supreme Court ,Judges , Udumalai, Shankar, murder, appeal, petition
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...