தர்மபுரி: பென்னாகரம் அருகே கம்பி வேரி அமைக்கப்பட்டதால் அருந்ததியர் குடும்பம் தவித்து வரும் நிலையில், உயர் சாதியினர் திட்டமிட்டு செயல்படுவதாக புகார் தெரிவித்துள்ளர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தொண்ணகுட்டனஹல்லி கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவரின் வீட்டுப்பாதை அடைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர், அவருடைய நிலத்திற்கு செல்லும் பாதையில் இரு தினங்களுக்கு முன்னர், இரும்புக்கம்பி வேலி அமைத்துள்ளார்.
இதனால், அருந்ததியின சமூதாயத்தை சேர்ந்த அர்ஜுனன் குடும்பத்தினர், வீட்டிற்கு செல்லவும், வெளியே வர முடியாமலும் தவித்து வருகின்றனர். கம்பி வேலி அமைத்ததால் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து தகவலறிந்த அரசு அதிகாரிகள், பென்னாகரம் வட்டாட்சியர் தலைமையில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இரு தரப்பும் வெவ்வேறு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வேலி அமைத்ததற்கு தீண்டாமை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.