சென்னை: சினிமா படப்பிடிப்பில் 100 பேரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு முதல்வரிடம் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை மனு அளித்துள்ளார். ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததற்காக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தோம் என ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.