×

செய்யூர் அருகே அங்கன்வாடி ஊழியர் கொரோனாவுக்கு பலி

செய்யூர்: செய்யூர் அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அங்கன்வாடி ஊழியர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செய்யூர் தாலுகா இடைக்கழிநாடு பேரூராட்சி வெண்ணாங்குபட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம். இவருடைய மனைவி ஜெயகாந்தி (53). இவர், அதே பகுதியில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடல் நேற்று காலை அவரது சொந்த ஊரான வெண்ணங்குபட்டுக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான முறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள மேட்டுத்தண்டலம் பாரதி நகர், காந்தி தெருவைச் சேர்ந்தவர் பக்கிரி (80). இவர் ஓய்வு பெற்ற அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலமின்றி இறந்த உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.


Tags : Seyyur ,Corona , Seiyur, Anganwadi worker, Corona, killed
× RELATED செங்கல்பட்டு கலெக்டர், எம்எல்ஏ...