×

சங்கராபரணி ஆற்றில் படுகை அணையுடன் இணைப்பு சாலை விரைவில் அமைக்க கோரிக்கை

திருக்கனூர்: திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சுமார் ரூ. 10 கோடி செலவில் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மூலம் படுகை அணை கட்டப்பட்டுள்ளது கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப் படாமல் உள்ளது. படுகை அணையில் இருபுறமும் சாலை அமைக்கப்பட்டு உள்ளது அதில் ஒரு பகுதி கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் மேம்பாலத்தின் அடியில் உள்ள தடுப்பணையில் இணைக்கப்பட வேண்டும். ஆனால் அதில் இணைக்கப்படாமல் பாதியில் நிறுத்தி விட்டு சென்று விட்டனர். இதனால் படுகை அணை திறக்கப்படும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணைப்பு சாலை படுகை அறையுடன் இணைத்தால் மட்டுமே ஆற்றில் வரும் தண்ணீர் தேக்கி வைக்க ஏதுவாக இருக்கும். அப்படி இல்லை என்றால் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தும் ஆகையால் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை எதிர்வரும் மழை காலங்களை கருத்தில் கொண்டு உடனடியாக இணைப்புச் சாலையை இணைத்து  முடிவுற்ற நிலையில் உள்ள படுகை அணையை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள், விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : river bed dam ,Sankarabarani ,Sankaraparani ,link road , Sankaraparani, link road with the bed dam
× RELATED புதுச்சேரி வில்லியனூரில் உள்ள...