சென்னை: பல்வேறு சம்பவங்களில் பலியான 25 பேரது குடும்பங்களுக்கு, தலா ரூ1 லட்சம் நிதியுதவி வழங்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி கிராமத்தை சேர்ந்த கஜன் மற்றும் ஜெகப்பிரியன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மாநிலம் முழுவதும் இதுபோல் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.