×

வியாபாரி தற்கொலை

அம்பத்தூர்: அம்பத்தூர், வெங்கடாபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நிதில் (33). இவர், முளைகட்டிய பயிறு வகைகளை விற்பனை செய்து வந்தார். இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு காலத்தில் நிதிலுக்கு தொழில் முடங்கியது. வீட்டு வாடகை, குடும்பச்செலவுக்கு பணமின்றி தவித்து வந்தார். இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில், கடந்த 31ம் தேதி நிதில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.

Tags : Merchant ,suicide , Merchant, Suicide
× RELATED அம்பானி இல்ல திருமண விழாவில் திருட முயன்ற திருச்சி கும்பல் கைது