×

தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது ஊரணியை மீட்டு தூர்வாரப்படுமா?: மக்கள் எதிர்பார்ப்பு

திருமயம்: அரிமளம் அருகே தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது ஊரணியை மீட்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்  தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் 2.5 ஏக்கர் அளவுள்ள ஊரணி உள்ளது. இதை அப்பகுதி  மக்கள் உப்பு ஊரணி என்று அழைப்பர். இது மழை காலத்தில் மழைநீர் சேகரிக்கவும், கோடை காலத்தில் விவசாயத்துக்கு நீர் பற்றாக்குறை  ஏற்படும்போது இதிலிருந்து ஒரு குறிப்பிட அளவு விவசாயத்துக்கு போதுமான நீரை எடுத்து அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்துவது வழக்கம்.

இந்த  ஏரியில் தனிநபர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக ஏம்பல் பகுதியில் மழையளவு குறைந்து வருவதால்  விவசாயம் சரிவர நடைபெறாமல் உப்பு ஊரணியில் நீர் சேகரிப்பும் தடைபட்டது. எனவே அரிமளம் அருகே தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது  ஊரணியை மீட்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : individuals , Individuals , aggressive,toilet, restored , expectation
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!