சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து வரும் 8ம் தேதி காலை 10 மணிக்கு மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். தற்போது அறிவித்துள்ள தளர்வுகளுக்கு ஏற்ப அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.