×

நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான்: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து!

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த  கல்வியாளராகவும், தத்துவஞானியுமாகவும் திகழ்ந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாளைய தமிழகத்தின் நம்பிக்கையாம் நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான்.

அவர்களை இன்றும் என்றும் நினைவில் கொண்டு வாழ்த்துவோம். போற்றுவோம், என கூறியுள்ளார். இதேபோல், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,  தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரும் ஆசிரியர்  தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : teachers ,Kamal Haasan ,children , Teacher's Day, Kamalhasan, Greetings
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...