×

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தேசிய தர உறுதி சான்றிதழ்

செங்கல்பட்டு: மத்திய அரசு சார்பில், குரோம்பேட்டை  அரசு மருத்துவமனைக்கு தேசிய தர உறுதிசான்று மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மத்திய குடும்ப நல அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு  மருத்துவமனைகளின் தரம், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சேவை, தூய்மை, உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழகத்தைச் சேர்ந்த 13 அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதிசான்று மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை,  காஞ்சிபுரம் ஆகிய அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசு சுகாதார துறையின் தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொடுத்த தேசிய  தர உறுதி சான்றிதழை மருத்துவமனை தலைமை மருத்துவர்கள், சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் ஜீவா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிசிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மத்திய அரசின் சுகாதாரத் துறையின் உயர்மட்ட குழு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஒரு வாரம் ஆய்வு செய்து, 13 மருத்துவமனைகளை தேர்வு செய்துள்ளனர். அதில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேவையை பாராட்டி தேசிய  தர உறுதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது என்றனர்.

Tags : Crompton Government Hospital , Crompton Government Hospital, National Quality Assurance Certificate
× RELATED குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மல்டி...