×

காரிமங்கலம் அருகே அதிகாரிகள் கண் முன் தீக்குளித்த விவசாயி

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட கிட்டேசம்பட்டி பகுதியில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு மேய்ச்சல் நிலம் உள்ளது. இதில் சில ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற அதிகாரிகள், போலீசாருடன் பொக்லைன், டிராக்டர் போன்றவற்றுடன் நேற்று சென்றனர்.

அப்போது நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விவசாயி சின்னசாமி(65) திடீரென அதிகாரிகள் கண் முன்பே, தனது உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், தீயை அணைத்து, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.



Tags : Karimangalam , Karimangalam, a farmer on fire
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்