சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனை மையங்களும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83,699 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.