×

கொரோனா தடுப்பூசி சர்வதேச அளவில் பரவலாக அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை எடுத்துக்கொள்ளும்: WHO தகவல்

ஜெனீவா: கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பரவலாக அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரையான காலத்தினை எடுத்துக்கொள்ளும் என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.63 கோடியை கடந்திருக்கக்கூடிய நிலையில், தடுப்பு மருந்து உருவாக்குவதற்கான போட்டியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை தடுப்பூசி சர்வதேச அளவில் பரவலாக்கப்படுவதற்கான காலத்தினை எடுத்துக்கொள்ளும் என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜெனீவாவில் கூறியுள்ளார். அதே போல தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான சோதனைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசி பரிசோதனையில் மூன்றாம் கட்டம் அதிக காலத்தினை எடுத்து மிகச்சரியான தீர்வினை வழங்கும் தடுப்பூசியாக வெளிவர வேண்டுமென விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Tags : Corona ,WHO , Corona, Vaccines
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...