×

கரூர் பஸ் நிலைய வளாகத்தில் கிருமிநாசினி இயந்திரம் பழுதால் பயணிகள் அவதி

கரூர்: கரூர் பஸ் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி இயந்திரம் பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை முன்பை விட தற்போது நாளுக்கு நாள் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் உள்ளது. தினமும் 20க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கரூர் பஸ் நிலைய வளாக பகுதியில் மக்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்து கொள்ளும் வகையில் கிருமி நாசினி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு சில வாரங்கள் மட்டுமே இது பயன்பாட்டில் இருந்ததாகவும், தற்போது தண்ணீர் வருவதில்லை, சோப்பு வைக்கப்படுவதில்லை போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் உள்ளது.தற்போது மாவட்டங்களுக்குள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து நடைபெறவுள்ளது. மக்கள் அதிகளவு வந்து செல்வார்கள் என்பதால் கை கழுவும் இயந்திரத்தை சீரமைத்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : bus stand premises ,Passengers ,Karur , Passengers, suffer , disinfectant, engine ,Karur ,bus ,stand, premises
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...