×

ஆர்.பொன்னாபுரம் ரோட்டோரம் திறந்தவெளி கிணற்றால் மக்கள் அச்சம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரம் ரோட்டோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொள்ளாச்சி வடுகபாளையத்திலிருந்து தாளக்கரை ரோடு வழியாக ஆர்.பொன்னாபுரம் கிராமத்துக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள கிணற்றில் பாதுகாப்பு கருதி மூடியோ அல்லது வலையோ அமைக்காமல் கிடப்பில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, கிராமங்களில் உள்ள திறந்த வெளி கிணறுகளில் வலைபோட்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த ஊராட்சிகளுக்கு, ஊரக வளர்ச்சித்துறை மூலம் உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்த கிணற்றில் வலைபோட்டு மூடாமல் இருப்பது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் பலர், கிணற்றருகே நின்று விளையாடுவதால் பெற்றோர் பயப்படுகின்றனர். எனவே, உடனே ரோட்டோர கிணற்றில் வலை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : R. Ponnapuram Rotorum ,wells ,R. Ponnapuram Rotorum People , R. Ponnapuram, Rotorum, People ,open ,wells
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்