×

ஐ.பி.எல் 13-வது சீசன் தொடரில் இருந்து விலகுவதாக ஹர்பஜன் சிங் அறிவிப்பு: 2 முக்கிய வீரர்கள் விலகியதால் சி.எஸ்.கே ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: ஐ.பி.எல் 13-வது சீசன் தொடரில் இருந்து விலகுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந் தேதி  முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக சிஎஸ்கே உட்பட 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்களும் அங்கு சென்று தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே,  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக உள்ள சுரேஷ் ரெய்னா, ஐ.பி.எல். தொடரில் இருந்து சமீபத்தில் வெளியேறினார்.  ரெய்னாவின் உறவினர் கொலை செய்யப்பட்டதே அவர் நாடு திரும்பியதற்கு காரணம் என்று ஒருபுறம்  கூறப்பட்டாலும் மற்றொரு புறம் தோனி மற்றும் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே அவர் வெளியேறினார் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து சி.எஸ்.கே அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக சி.எஸ்.கே நிர்வாகத்திடம் ஹர்பஜன்  விளக்கமளித்துள்ளார். ரெய்னாவை தொடர்ந்து இராண்டாவது வீரராக ஹர்பஜன் சிங் அணியிலிருந்து விலகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  



Tags : fans ,withdrawal ,season ,departure ,IPL ,CSK ,Harbhajan Singh , Harbhajan Singh announces withdrawal from IPL 13th season: CSK fans shocked by the departure of 2 key players
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...