×

மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர்மழை எலிவால் அருவியில் கொட்டுது தண்ணீர்

பெரியகுளம்: கொடைக்கானல் மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக எலிவால் அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ளது எலிவால் அருவி. கொடைக்கானல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது, இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும். வத்தலக்குண்டு வழியில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் டம்டம் பாறை அருகே எலிவால் அருவி, மஞ்சளாறு அணையின் முழு இயற்கை அழகையும் ரசித்து விட்டு செல்வர்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை காலத்தில் எலிவால் அருவியில் நீர்வரத்து இருந்தது. அதன்பின் போதிய மழை இல்லாததால் அருவியில் முற்றிலும் நீர்வரத்தின்றி காய்ந்து காணப்பட்டது.இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் எலிவால் அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன்மூலம் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Western Ghats , Continuous, rains , Western ,Ghats
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...