டெல்லி: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக அறிவிக்கப்பட்டதால் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.